2 எண்ணிக்கை பாடல் பாட
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,* எண்ணும்-
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே. (2)
நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!* நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி-
ஊரகத்தாய்,* ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்!* உள்ளுவார் உள்ளத்தாய்,* உலகம் ஏத்தும்-
காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!* காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு-
பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்!* பெருமான் உன் திருவடியே பேணினேனே. (2)
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (2)