2 எண்ணிக்கை பாடல் பாட
பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ் மலிந்த-
பாமன்னு மாறன்* அடிபணிந்து உய்ந்தவன்* பல் கலையோர்-
தாம்மன்ன வந்த இராமானுசன்* சரணாரவிந்தம்-
நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே. (2)
கள்ளார் பொழில் தென்னரங்கன்* கமலப் பதங்கள் நெஞ்சில்-
கொள்ளா* மனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்-
விள்ளாத அன்பன் இராமானுசன்* மிக்க சீலமல்லால்-
உள்ளாது என் நெஞ்சு* ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே. (2)
மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,* வஞ்ச முக்குறும்பாம்-
குழியைக் கடக்கும்* நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்*
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி* அல்லா-
வழியைக் கடத்தல்* எனக்கு இனி யாதும் வருத்தமன்றே. (2)