2 எண்ணிக்கை பாடல் பாட
வையம் தகளியா* வார்கடலே நெய்யாக,*
வெய்ய கதிரோன் விளக்காக,* - செய்ய-
சுடராழி யான்அடிக்கே* சூட்டினென்சொல் மாலை,*
இடராழி நீங்குகவே என்று (2)
சென்றால் குடைஆம்* இருந்தால் சிங்காசனம்ஆம்,*
நின்றால் மரவடிஆம் நீள்கடலுள்,* - என்றும்-
புணைஆம் மணிவிளக்குஆம்* பூம்பட்டுஆம் புல்கும்-
அணைஆம்,* திருமாற்கு அரவு. (2)
உளன்கண்டாய் நல்நெஞ்சே!* உத்தமன் என்றும்-
உளன்கண்டாய்,* உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*
வெள்ளத்தின் உள்ளானும்* வேங்கடத்து மேயானும்,*
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (2)