2 எண்ணிக்கை பாடல் பாட
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்* கனைஇருள் அகன்றது காலையம் பொழுதாய்,*
மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்* வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த* இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,*
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்* அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. (2)
ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே* யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,*
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்* கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்* சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*
ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள* அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?* கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?*
துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்* துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து* தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்-
அடியனை,* அளியன் என்று அருளி உன் அடியார்க்கு- ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே! (2)