விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
    கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
    மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
    ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏதம் இல் - குற்றமற்ற
தண்ணுமை - சிறுபறையும்
எக்கம் - ஒற்றைத்தந்தியையுடைய வாத்யமும்
மத்தளி - மத்தளமும்
யாழ் - வீணையும்

விளக்க உரை

வாத்தியம், மத்தளம், வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றைக்கொண்டுதிக்குகள் எங்கும் இசை கூட்டி பாட்டு பாடக்கூடியவர்களானகின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும், மகரிஷிகளும், தேவர்களும், யக்ஷர்களும் மற்றும் சித்தர்களும்தேவரீருடையதிருவடித்தாமரைகளைசேவிப்பதற்காகஇரவுப் பொழுது முழுவதும் மோஹித்துக்கிடந்தனர். அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருள எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

English Translation

The air is rent with the music of beautiful one- stringed instruments, drums, lyres, flutes and cymbals. All night long the Kinnaras, the Garudas and the Gandharvas have been singing songs. The great sages and celestials, the Yakshas, the Charanas and the Siddhas have been yearning to worship your feet. Now to grant them audience, O Lord of Arangam, pray wake up.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்