விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
    இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
    சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*  இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
    அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம்பெருமான் - எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல் - தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும் - தேவேந்திரனும்
ஆனையும் - (அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து - வந்திருப்பது மன்றி,

விளக்க உரை

அடியேனுக்குஸ்வாமியான தேவரீர் திருக்கோவிலின்வாயிலிலேதேவேந்திரனும், அவனுடைய வாகனமானஐராவதமும், தேவர்களும் அவர்களுடைய பரிவாரங்களும், மகரிஷிகளும், யக்ஷர்களும், மற்றும் கந்தர்வர்நெருக்கசாதரர்தள்ளவும், தேவரீருடையதிருவடிகளைசேவிக்க வந்து நிற்கின்றனர், அரங்கத்தம்மாபள்ளிஎழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

English Translation

This here is the throng of celestials. These here are the great Munis and Maruts. This here is Indra come riding on his elephant in front of your temple. With Sundaras crowding and Vidyadharas cramping, the Yakshas are lost in contemplation of your feet. There is no place to stand. O Lord of Arangam, pray wake up.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்