விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    களி நிலா எழில் மதிபுரை முகமும்*  கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும்* 
    தளிர் மலர்க் கருங் குழற் பிறையதுவும்*  தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த* 
    இளமை-இன்பத்தை இன்று என்தன் கண்ணால்*  பருகுவேற்கு இவள் தாயென நினைந்த* 
    அளவில் பிள்ளைமை-இன்பத்தை இழந்த*  பாவியேன் எனது ஆவி நில்லாதே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணனே களிநிலா - ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவையுடைய;
எழில் மதி புரை முகமும் திண் கை - பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணித்தான திருக்கைகளும்;
முதலாயிரம்  - பெருமாள் திருமொழி;
மார்வும் - திருமார்பும்;
திண் தோளும் - வலிமைபொருந்திய திருத்தோள்களும்;

விளக்க உரை

கண்ணபிரானே! செறிந்த நிலாவையுடைய பூர்ண சந்திரன் போன்ற திருமுகமும் திண்ணிதான திருக்கையும் திருமார்வும் திருத்தோளும் திருக்குழலும் திருநெற்றியும் திருக்கண்களுமாகிய இவ்வயவங்களின் போபைகளால் விளாங்கா நின்றுள்ள உனது யௌவந பருவத்திலழகை இப்போது நான் கண்ணாரக் கண்டநுபவியா நின்றேனாகிலும், தாயாரொருத்தியையேயன்றி வேறொருத்தரையு மறியாத இளம் பருவத்தை அநுபவிக்க பெறாமற்போனேனே! என்கிற அநுதாபமே என் நெஞ்சைக் கொள்ளை கொண்டிருப்பதனால் புண்படுத்தா நின்ற தென்கிறாள்.

English Translation

O Krishna! I can only see and enjoy your infancy through my mind your moon-like radiant face, your well formed hands, arms and chest, your flowers-and-sprig-bedecked-dark-hair, your crescent-marked forehead and your large lotus-eyes. Alas, within the span of thinking that I was your mother, I lost the joy of begetting you. O My karma! I fear I shall not live.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்