விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உம்பர் உலகு ஆண்டு*  ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்*
    அம்பொற் கலை அல்குல்*  பெற்றாலும் ஆதரியேன்*
    செம் பவள-வாயான்*  திருவேங்கடம் என்னும்*
    எம்பெருமான் பொன்மலைமேல்*  ஏதேனும் ஆவேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உம்பரு உலகு - மேலுலகங்களை யெல்லாம்;
ஒரு குடை கீழ் - ஒரு கொற்றக் குடையின் நிழலிலே;
ஆண்டு - அரசாண்டு;
உருப்பசி தன் - ஊர்வசியினுடைய;
அம் - அழகிய;

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில் படியாகக் கிடக்க வேணுமென்று பிரார்த்தித்தது எம்பெருமானுடைய பவளவாய் காண்பதற்காக; அப்புருஷார்த்தம் கிடையாதொழியினு மொழியும்; ஏனெனில்; திருமலையில் ஸந்நிதிக்குள் கருங்கல் படியிருப்பது திருவேங்கட முடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று மஹா ப்ரபுக்கள் வந்து அப்படியை ஸ்வர்ணகவசத்தால் ஆவரிக்கக் கூடும். அப்போது நாம் அப்பன் திருமுகமண்டல ஸேவையை இழந்தோமாவோம்; ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கல்ல என்று அறுதியிட்டார். பின்னை எந்தப் பிறவியைப் பிரார்த்திக்கலாமென்று யோசித்தார். கீழ் நிகழ்ந்த மாதிரி ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது. கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் “ எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே” என்கிறார்.

உரை:2

நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.

English Translation

Even if I am offered the gold-girdled hips of Urvasi and the parasoled kingship over celestials, I will not change my mind. Yet I will settle for just anything, if it be on Venkatam hills where my Lord resides.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்