விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாட மாளிகை சூழ்*  மதுரைப் பதி* 
    நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு* 
    ஓடை மா*  மத யானை உதைத்தவன்* 
    கூடுமாகில்* நீ கூடிடு கூடலே!*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓடை - நெற்றிப் பட்டத்தையுடைத்தாய்
மாமதம் - மிக்க மதத்தையுடைத்தான
யானை - (குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன் - உதைத்து முடித்த கண்ணபிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி - மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே

விளக்க உரை

உரை:1

குவாலயாபீடமென்னும் மதயானையை முடித்தருளின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.-வில்விழாவென்ற வ்யாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ய பலராமர்கள் கம்ஸனுடைய அரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவ்வரண்மனைவாசல் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீட மென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர் அதனைஎதிர்த்து அதன்தந்தங்களிடையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அவ்யானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளே போயினர் என்றவரலாறு இங்குணரத்தக்கது. இரண்டாமடியின் இறுதியிலுள்ள வந்திட்டு என்ற வினையெச்சம்-உதைத்தவன் என்பதிலே அந்வயிப்பதல்ல’ கூடுமாகில் என்பதிலே அந்வயிக்கக்கடவது. இப்போது, கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் இருப்பதாகவும், இவ்வாண்டாள் தான். வடமதுரையிலே யிருப்பதாகவும் பாவநப்ரகர்ஷம் செல்லுகிறபடி. மதுரைப்பதிக்கு “மாடமாளிகைசூழ்” என்று விசேஷணமிட்டஸ்வாரஸ்யத்தைக் கண்டறிந்த பெரியவாச்சான்பிள்ளை ரஸோக்தியாக அருளிச்செய்கிற ஸ்ரீஸூக்திகளைக் காணீர்- “அவன் வில்விழவுக்கென்று கோடித்தான்’ இவள் இவன் வரவுக்கென்றிருக்கிறாள்”.

உரை:2

மாடமாளிகைகள் சூழ்ந்த வடமதுரைப்பதியில் வரும்போது கம்சனால் ஏவப்பட்டு நடுவீதியில் மறித்த, மத நீர் ஓடை போல் ஒழுகும் மதம் பிடித்த குவலயாபீடம் என்னும் யானையை உதைத்துக் கொன்றவன் என்னைக் கூடுமாகில் நீ கூடிடு கூடலே.

English Translation

Krishna entered the city of Mathura and killed the rutted elephant Kuvalayapida. I wish he comes here now and, inquiring of me, finds his way to my street. If he will come, then join, O Lord-of-the-circle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்