- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
எல்லோரும் திரண்டுவந்து அழைக்கவேண்டும்படி கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது. பாவாய்! கீழ்வானம் வெள்ளென்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க; இதனைக்கேட்ட அவள், அதற்குள் இராக்காலம் கழிகையாவதென்? கீழ் வானம் வெளுக்கையாவதென்? இஃது உங்களுடைய விரிந்த ஞானம்; அஞ்சுடாவெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் என்று திங்கள் திருமுகத்துச் சேயிழை யாரான நீங்கள் நெடும்போதாகக் கீழ்த்திசையை நோக்கிகக்கொண்டிருக்கையாலே உங்களுடைய முகநிலா கீழ்த்திசையிற் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து பிரதிபிம்பித்துத் தோன்றுகையாலே கிழக்கு வெறுத்தது போலத் தோற்றுகிறது; இஃது உங்களுடைய அந்யதாஜ்ஞானம்; வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன; எருமைகள் பனிப்புல் மேய்கைக்காகச் சென் பரந்தமை ஏற்ற அடையாளமன்றோ? என்கிறார்கள். சிலர், எருமை சிறை வீடு எனப் பாடங்கொண்டு, எருமைகள் சிளையீனின்றும் (தொழுவத்தினின்றும்) விடுக்கப்பட்டு என்றுரைத்தனர் அது பொருத்தமற்றதெனமறுக்க. சிறுவீடு மேய்கையாவது ஊர்ப்பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை. நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.
உரை:2
English Translation
The Eastern horizon whitens, water buffaloes wander out to graze the dew tipped morning grass. The other girls were keen to go; we made them wait, and came to call you. Dainty girl, wake up and join our chorus. The Lord of Gods ripped the horse’s jaws and killed the wrestlers. If we go and approach him with our prayers, he will listen in attention, and bestow his grace.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்