விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்குஎண்ணி நான்வளர்த்த*  சிறுகிளிப்பைதலே* 
    இன்குரல் நீ மிழற்றேல்*  என்ஆர்உயிர்க் காகுத்தன்*
    நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்*  கண்ணன்கை காலினன்* 
    நின்பசும்சாம நிறத்தன்*  கூட்டுண்டு நீங்கினான். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணன் கை காலினன் – உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும்
நின் பசும் சாமம் நிறத்தன் – உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும்
என் ஆர் உயிர் – என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான
காகுத்தன் – இராமபிரான்
கூட்டுண்டு நீங்கினான – என்னோடே கலந்துப் பிரிந்தான்

விளக்க உரை

இந்த நிலைமையில் நாம் திருநாமத்தைச் சொல்லலாகாது என்றறியாதே திருநாமத்தைச் சொல்லி நவிகிற கிளிப் பிள்ளையைக் குறித்து எனக்கு அஸஹயமான தசையிலே இப்படிச் சொல்லி நலியவே உன்னை நான் வளர்த்தது! என்று சொல்லி அத்தை நிவர்த்திப்பிக்கிறாள். நன்கெண்ணி நான் வளர்த்த–வளர்த்தலாவது திருநாமங்க கற்பித்தல்; எந்த மையத்தில் திருநாமம் சொன்னால் ஸாத்மிக்கும்; எந்த ஸமயத்தில் அது சொன்னால் பாதகமாகும்–என்பதை யறிந்து மையம் பார்த்துச் சொல்லுமாயென்று உனக்கு நான் கற்பித்து வைத்திருக்க, இங்ஙனே பாதகமான நிலைமையிலே திருநாமத்தைச் சொல்லிக் கொலை பண்ணுவது முண்டோ! என்று கிளிப் பிள்ளையை நோக்கி நோகிறான். இன் குரல் நீ மிழற்றேல்–இன் குரல் என்றது கூரியவேல் என்னுமாபோலே யென்பர் நம்பிள்ளை. கிளியே! உன்னுடைய குரலாகிற கூர்வேல யிட்டுக் கொலை பண்ணாதே யென்றபடி. "நிரம்பரமென் சொல்லால் என்னை முடியாதேகொள்; மாத்ருவதத்திலேயும் ப்ரவர்த்திப்ருண்டோ?" என்பது ஈடு. இப்போது எம்பெருமான் என்னோடு கூடியிருந்தானாகில், நீ திருநாமஞ் சொல்லுவது எனக்குப் பரம போக்யமாகவேயிருக்கும்; அவனோ பிரிந்து போயினான். ஆன பின்பு, அவன் வடிவுபோலே யிருக்கும் உன் வடிவைக் காட்டி, அதற்கு மேலும் அவன் திருநாமங்களையுஞ் சொல்லி என்னை நோவு படுத்தாதே யென்றாளாயிற்று.

English Translation

O Puerile parrot! I have brought you up well. Now do not start your sweet prattle. Your beak and feathers take my mind to my Lord Rama again. He enjoyed union with me then, and deserted me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்