- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ் ஐந்து பாட்டுக்களாலும் ஆழ்வார் வெளியிட்ட ஆர்த்தியைக் கண்ட எம்பெருமான் ஒருவாறு இவருடைய ஆர்த்தியைத் தீர்ப்போமென்று திருவுள்ளம் பற்றி ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அவ்வளவிலே தம்முடைய நெஞ்சு உகந்து அநுபவிக்கிறபடியைப் பேசுகிறாரிதில், எம்பெருமானைக் கருத்தே! என்று விளிக்கிறார்; நான் தளராதபடி எனக்கு வலிமையையூட்டிக் கொண்டு நடத்திக் கொண்டு போருமவனே! என்றபடி, "எனக்கு மிடுக்கானவனே!" என்பது வியாக்கியானம். உன்னைக் காணக்கருதி என்றது– கரணவாசைப்பட்டவளவிலே யென்றபடி. அப்போதே நீ என்னெஞ்சிலே வந்து சேர்ந்த படியாலே யென்று கூட்டிக் கொள்வது. என்னெஞ்சத்து இருத்தாகவிருத்தினேன்–இனியொரு காலும் போகாதபடி ஸ்தாவர ப்ரசிஷ்டையாக என்னெஞ்சிலே யிருத்தினேன். நீ ஸாமான்யமாக என்னெஞ்சிலே வந்திருக்கத் தக்கவனல்லையே, நீ பராத்பரனல்லையோ வென்கிறார் இரண்டு விளிகளால். தேவர்கட்கெல்லாம் விருத்தா– 'இவர்களுக்குமேல் உயர்ந்தவர்களில்லை' என்னும் படியாக வுயர்ந்தவர்களுக்கெல்லாம் மேம்பட்டவனே! (•••) என்கிற வடசொல் விருத்தனென்றாகி அது விளியுருபு ஏற்றுக் கிடக்கிறது. விளங்குஞ்சுடர்ச்சோதியுயரத்து ஒருத்தா–பரமபதமானது "சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதி" என்னும்படியான விடமாகையாலே விளங்குஞ் சுடர்ச்சோதியென்றே அத்திருநாட்டை நிர்தேசிக்கிறபடி. உயரத்து–உயர்ந்த நிலத்திலே யென்கை. ஒருத்தன்–அத்விதீயன்; இணையில்லாதவன். என்னுள்ளம் உன்னை உகந்து உள்ளும்–நீ பரமபதத்திலே யெழுந்தருளியிருந்து விண்ணாட்டவர் மூதுவர்களை அநுபவிப்பிக்குமாபோலே என்னை யநுபவிப்பிக்கையாலே என்னெஞ்சு மகிழ்ச்சியின் எல்லையிலே நிற்கின்றது என்படி.
English Translation
Longing to see you, I contemplate your form. Peerless Lord of Vaikunta! My heart rejoices in you
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்