விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தமர்கள் கூட்ட வல்வினையை*   நாசம் செய்யும் சதுமூர்த்தி* 
    அமர்கொள் ஆழி சங்குவாள்*  வில்தண்டுஆதி பல்படையன்*
    குமரன் கோல ஐங்கணைவேள்தாதை*  கோதுஇல் அடியார்தம்* 
    தமர்கள் தமர்கள் தமர்களாம்*  சதிரே வாய்க்க தமியேற்கே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாசம் செய்யும் சதிர் - போக்கும்படியான திறமையுடைய
மூர்த்தி - ஸ்வாமியாய்
அமர் கொள் - போர் செய்யக் கிளர்கின்ற
ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி - பஞ்சாயுதங்கள் முதலிய
பல் படையன் - திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய்

விளக்க உரை

மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப்பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும். “கோதிலடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாஞ் சதிரேவாய்க்க தமியேற்கை“ என்று தமர்கள் தமர்கள் தமர்களென்று மூன்று வர்க்கமே சொல்லியிருந்தாலும் யாப்பின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுச் சொன்னவளவேயன்றி, பர்யாப்தி பிறந்து சொன்னதன்று சரமாவதி தாஸ்யமே விரும்ப்ப்படுகின்றதாகச் கொள்க. தமரர்கள் கூட்ட வல்வினையை நாசஞ்செய்யும் என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் கூறுவர், (1) தமர்களுடைய கூட்டத்தின் வல்வினையை நாசஞ்செய்யும். (2) தமர்களின் கூட்டமான (அபரிமிதமான) வல்வினையை நாசஞ்செய்யும் (3) தமர்கள் வல்வினை வுட்ட அதை நாசஞ்செய்யும் (அதாவது) வல்வினைகளை மேன்மேலும் ஆர்ஜித்துக்கொண்டிருக்க, அவற்றை நிச்சேஷமாக நாசஞ்செய்யுமென்றபடி. “சதிர்மூர்த்தி “சதுமூர்த்தி“ என்பன பாடபேதங்கள். சதிராவது ஸாமர்த்தியம், அதையுடைய ஸ்வாமி. சதுமூர்த்தி –அநொகவிக்ரஹ பரிக்ரஹம் செய்பவன். (அமர்கொளாழியித்யாதி) விரோதிநிரஸனத்திற்காகச் செருக்கிளர்ச்சியையுடைய பஞ்சாயுதங்களையும் மற்றும் பலவாயுதங்களையுமு (ஷோடசாயுதங்களையும்) உடையவன். குமரன் –நித்யயுவாவாயிருக்குமவனென்கை. கோலவைங்கணை வேள்தாதை அழகுக்கு எனக்கு மேலில்லை யென்றிருக்கும் பஞ்பாணனுடைய அழகுக்கும் உத்பத்திஸ்தானமானவன். இப்படிப்பட்ட எம்பெருமானுடைய, கோதிலடியார் –ப்ரபோஜநாந்தர அபேக்ஷையாகிற கோது இல்லாத அடியார். இப்பதிகத்தில், கீழே * சயமே அடிமை தலைநின்றார் என்றும், இப்பாட்டில் கோதிலடியார் என்றும், மேற்பாட்டில் * நீக்கமில்லாத வடியார் என்றும் மூவகைச் சொற்களால் சொல்லுகிறார். இதற்கு நம்பிள்ளையருளிச்செய்யும்படி, சயமேயடிமை தலைநின்றார் –பரதாழ்வான் போல்வார், கோதிலடியார் –சத்ருக்நாழ்வான் போல்வார், நீக்கமில்லாவடியார் இளையபெருமாள் போல்வார் என்று.

English Translation

The Lord has the power to destroy the karmas of his devotees, with his conch, discus, bow, mace, dagger and other weapons. He is youthful, and love-god kama's father, I only wish to serve the servants of his devotees

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்