- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ப்ண் கரதூஷண வதத்தில் பிராட்டி பெருமாளுடைய சௌர்யவீர்யபராக்ரமங்களில் தோற்று * தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவஹ்ரு ஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே* என்று அனைத்துக் கொண்டாளென்று கேட்டிருந்தோம், அப்படியே இப்பெண்பிள்ளையும் திருப்புலியூர்த்தலைவன் திருவாழி திருச்சங்கு முதலான திவ்யாயுதங்களை யணிந்துகொண்டு போர்க்களத்திலே சென்று அரக்கரசுரர்களைத் தொலைத்தருளும் பேராற்றலை இரவும் பகலுமிடைவீடின்றிப் புகழ்ந்து கூறாநின்றாள், இதனாலும் இவளுக்கு அத்திருப்பதியெம்பெருமானோடே ஸம்பந்தம் நிகழ்ந்ததாகத் தோன்றுகின்றதென்கிறாள் தோழி. “புகழுமிவள்நின்றிராப்பகல்“ என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர் வளமே யென்பதனோடு அந்வயம். கடல்வண்ணானான பெருமான் “ஜ்வாலாஜாஜ்வல்யமாநா“ என்னும்படியான ஜ்வாலைபொருந்திய திருவாழியாழ்வான் முதலான திவ்யாயுதங்களையணிந்து எழுந்தருள்வதானது “ஒருகடல் நெருப்புக்கொளுத்தி நடந்து செல்லா நின்றதோ! என்று உல்லேகிக்கும்படியாகவுள்ளதென்கிறாளாம் தலைவி, அதனை அநுவாதம் செய்கிறாள் தோழி.
English Translation
Night and day she stands and signs in praise of the bright mansioned Tiruppuliyur's grandeur. Like the ocean catching fire, lashing balls of hooping fire, -his flery weapons are impatient to destroy the Asuras
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்