விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைத்தேன் மதியால்*  எனதுஉள்ளத்துஅகத்தே* 
    எய்த்தே ஒழிவேன்அல்லேன்*  என்றும் எப்போதும்*
    மொய்த்துஏய்திரை*  மோது தண்பாற் கடலுளால்* 
    பைத்துஏய் சுடர்ப்பாம்பணை*  நம்பரனையே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை - படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை
மதியால் - அனுமதியாலே
எனது உள்ளத்து அகத்தே - என்னெஞ்சிலுள்ளே
வைத்தேன் - பொருந்த வைத்தேன்,
என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன் - இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன்

விளக்க உரை

இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார். பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறகு முன்னடிகளை அந்வயிப்பது. * அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத்திரை பலமோத்தப்பள்ளி கொள்கின்ற பிரான் * என்று பெரியாழ்வார் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றதாக விளங்கிற்று.

English Translation

I have placed in the recess of my heart the Lord who sleeps on a hooded serpent deep in the cool ocean of Milk. I shall never tire of contemplating him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்