- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பரிவர்களின் மிகுதியைக் காட்டும் பாசுரமிது. இப்பாட்டுக்கு மூன்றாமடி உயிரானது, * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண் சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்பது. எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களை மனத்திலே கொண்டு “இக்குணங்களை யுடையானுக்கு என்வருகிறதோ“ என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரவருளராம், அதைக்காட்டி எம்பெருமான் ஆழ்வாரைத் தேற்றுவித்தபடியாலே அதைப் பாசுரத்திலே கூட்டி அநுஸந்தித்தாராயிற்று. அவர்களை வண்சிவனு மயனுந்தானு மொப்பார் என்றது –ஆளவந்தார் ஸ்தோத்ரத்னத்தில் * த்வதாச்ரிதாநாம் ஜகதுத்பவஸ்திதி ப்ரணாச ஸம்ஸார விமோசநாதய பவந்தி லீலா, * என்றருளிச் செய்தபடி ஸ்ருஷ்டிஸ்திதி ஸம் ஹாராதிகளை இவர்களே நிரவஹிக்க வல்லார யிருக்கையைச் சொன்னபடியாம். இங்கே நம்பிள்ளையீடு – ஸ்ரீபரத்வாஜமஹாமுனியோடொக்கு மவர்கள், தன்னைப் பிரிந்தவன்றுமுதல் ராவணவதம் பண்ணி மீளுமளவுஞ் செல்ல “இவர்களுக்கு என் வருகிறதோ“ என்று இத்தையே நினைத்திருந்தவனிறே ஸ்ரீ பரத்வாஜபகவான்“ என்று.
English Translation
I have found the refuge for my soul, in high mansioned Tirucchengunrur. Here he resides amid three thousand devotees with Siva and Brahma. He is father and mother to the celestials and the sages. He reclines in the deep ocean, not knowing his own nature
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்