- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வெறும் வீர ஸ்ரீயைக் காட்டினபடியேயன்று, தன்னுடைய பரமபோக்யத்தை காட்டிக் கொடுத்தானென்கிறார்யாமுடையமுதம் என்று. எங்கள் என்றும் யாமுடை கூட்டி யென்க. “* கேசவன் தமர்க்குப் பின்பு தனியரல்லரே“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. “இமையவரப்பன்“ என்பது அத்தலத் தெம்பெருமானுக்கு இற்றைக்கும் வழங்குந் திருநாமம். இமையவரப்பனென்று சொல்லி உடனே என்னப்ப னென்கையாலே நித்ய ஸூரிகளை அடிமை கொண்டாப்போலே தம்மையுமடிமை கொண்டவன் என்பது காட்டப்பட்டதாம். “குறைவற்றார்க்கும் ஸத்தா ஹேதுவாய் குறைவுக்கெல்லையான வெனக்கும் ஸத்தா ஹேதுவானவன்“ என்பது ஈடு. நான்முகனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டியை நடத்தியும், தானான தன்மையில் ரக்ஷணத்தை நடத்தியும், ருத்ரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸம்ஹாரத்தை நடத்தியும் இப்படி மூவுருவாயிருக்குமவன் என்னுடைய பயத்தைப்போக்கி எனக்கும் தாரகனாயிராநின்றானென்கிறது இரண்டாமடி. இப்படிப்பட்ட வெம்பெருமான் நீர்வளம் பொருந்திய திருச்சிற்றாற்றுப்பதிலே, விபவாவதாரங்கள் போலே தீர்த்தப் ப்ரஸாதித்துத் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளாமே நித்யஸந்நிதி பண்ணி யிராநின்றான், அவனை யொழிய எனக்கு உற்ற துணையில்லை, அவனே நமக்கு நற்றுணைவன் என்றாராயிற்று.
English Translation
Our sweet destination is Tirucchengunrur where fish dance enchanted in nectar-sweet waters of Tirucchitraru surrounding our first-Lord. He is the Lord who takes various forms to create, protect and destroy the world. Other than him, our ambrosia and master, who can be my refuge?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்