- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார். ஸம்ஸாரி செதநர்கள் எம்பெருமானோடு சேர்ந்து ஆனந்தமநுபவிப்பது போல, அவ்வெம்பெருமான் தானும் பிராட்டியோடு சேர்ந்தே ஆனந்தமநுவிபவிக்கப் பெறுகின்றானென்பது முதலடியிற்போதரும். “இவ்வேழுலகை இன்பம் பயக்க” என்றவிடத்தில் ஈடு-; மாதாபிதாக்களிரு வரும் சேரவிருந்து பரியப்புக்கால் ப்ரஜைகளுக்கு ஒரு குறைவுகளும் பிறவாதிறே. ஆக இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தமுண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே லோகத்துக்கு ஆனந்தமுண்டாக, அதுதன்னைக் கண்டு ப்ரஜை பால்குடிக்கக் கண்டுகக்கும் தாயைப்போலே இவர்களுக்குண்டான ப்ரீதியைக்கண்டு அத்தாலே தாங்கள் இன்யராயிருப்பர்களாயிற்று.” திருவாய்மொழி கேட்கைக்குப் பாங்காயிருப்பதொரு தேசம் பெற்றோமென்று பறாப்பேறு பெற்றாப்போலே விரும்பி யெழுந்தருளியிருக்கிற தேசமென்பது தோன்ற “இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற” என்கிறார். இப்படிப்பட்ட பெருமான் அவ்விடத்திலிருப்பை ஸ்வயம் ப்ரயோஜநமாகக் கருதி, அவதாரங்கள் போலே தீர்த்தம் ப்ரஸாதியாதே நித்யவாஸம் பண்ணுமிடமாய், அவன் தன் விபூதியோடேயிருந்து திருவாய்மொழி திருச்செவி சாத்துகைக்கீடான பரப்பையுடைய பூம்பொழிலாலே சூழப்பட்டதான திருவாறன் விளையை ப்ரதக்ஷிணம் பண்ணி நமஸ்கரிக்கும் படியான காலம் என்றோ வென்றாராயிற்று.
English Translation
When will the day be when I ambulate with folded hands, the Lord who dearly resides in Tiruvaranvilai amid groves with lotus-dame Lakshmi on his chest? He is our Lord who rules us sweetly, spreading happiness over the seven worlds
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்