- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மாயா! வாமனனே!* மதுசூதா நீ அருளாய்,*
தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்* விசும்பு ஆய் கால் ஆய்,*
தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நீயாய் நீ நின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2)
காணொளி
பதவுரை
மாயா - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வாமனனே - வாமநாவதாரஞ் செய்தவனே!
மதுசூதா - மதுகைடபர்களைத் தொலைத்தவனே!
நீ அருளாய் - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்;
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய் - பஞ்ச பூதங்களுமாய்
விளக்க உரை
மாயவனே! வாமனனே! மதுசூதனனே! தீயாகி நீராகி நிலனாகி ஆகாசமாகிக் காற்றாகித் தாயாகித் தந்தையாகி மக்களாகி மற்றைய உறவினர்களாகி மேலும் சொல்லப்படாத பொருள்களுமாகி உனது உருவுமாகி நீ நின்றபடிகள் தாம் இவை என்ன படிகள்?
English Translation
O wondrous Lord, Vamana!, Madhusudana! Tell me. You stand as Earth, Fire, Water, Sky and Wind, then as Mother, Father, Children and relatives, as all else, and as you; what do these mean?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்