- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
என் மின்னு நூல் மார்வன்* என் கரும் பெருமான் என் கண்ணன்,*
தன் மன்னு நீள் கழல்மேல்* தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,*
கல்மின்கள் என்று உம்மையான்* கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,*
செல்மின்கள் தீவினையேன்* வளர்த்த சிறு பூவைகளே!
காணொளி
பதவுரை
தீ வினையேன் வளர்த்த - கொடிய பாவியான நான் வளர்க்க வளர்ந்த
சிறு பூவைகளே - சிறு பூவைப்பறவைகளே!
என் மின்னு நூல் மார்வன் - மின்போலே விளங்குகின்ற யஜ்ஞோபவீ தமணிந்த்திருமார்பை எனக்கு அநுபவிப்பித்தவனும்
என் கரும் பெருமான் - தன் திருமேனி நிறத்தை எனக்கு அநுபவித்த பெருமானும்.
என் கண்ணன் - எனக்கு ஸர்வாத்மநா விதேயனுமான எம்பெருமான்
விளக்க உரை
தீவினையேன் வளர்த்த சிறிய பூவைகளே! என் மின்னு நூல் மார்பன், என் கரும்பெருமான், என்கண்ணன், தன்னுடைய நீண்ட திருவடிகளின்மேலே பொருந்தியிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயினை நமக்கு அன்றிக் கொடான்; கற்றுங்கொள்ளுங்கோள் என்று உங்களை யான் கற்பித்து வைத்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு செல்லுங்கோள்.
English Translation
O Little mynahs, this wicked self brought you up. My radiant-chested dark Lord Krishna will not deny you the Tulasi on his radiant lotus feet. Go to him and speak the worlds I taught, repeating them all the way.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்