- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(கரைகொள்) இப் பெண்பிள்ளையைத் துலைவில்லித் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவர்கள் அவ்விடத்துச் சோலையின் வாய்ப்பையும் நீர் நிலங்களின் வளங்களையும் இவளுக்கு காட்டி கொடுக்கவேணுமோ? தாமிரபர்ணியின் கரையை விளாக்குலைகொண்டிருக்கின்ற இவள் அத்திருப்பதிதன்னிலேயே யீடுபட்டு உங்களோடு உறவு அறும்படியானாள், க்ஷீரஸாகர சயனத்தையும் த்ரிவிக்கரமாபதானத்தையும் ஆநிரைமேய்த்தபடியையுமே பிதற்றிக்கொண்டு கிடக்கிறவளை இனி நீங்கள் உங்கள் மகளென்று அபிமானிக்க ப்ராப்தியுண்டோ வென்று அன்னையர்க்குத் தோழிமார் உரைக்கின்றார்கள். “கரைகொள்பைம்பொழில்“ என்றவிடத்திற்குத் தாத்பர்யார்த்த மருளிச்செய்கிறார் நம்பிள்ளை –“அத்திருச் சோலைய உங்களுடைய ஹிதவசனத்தாலே பேர்த்துக்கொடுப்போமன்று அன்றோ இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது“ என்று. ஆற்றங்கரையிலே சோலைகளையும் அத்தலத்தலே பொருந்திவிட்டாள், அச்சோலைகளைக்குறித்து ஹிதவசனம் எப்படிப் பயன்படாதோ அப்படியே இவளைக்குறித்தும் இனி ஹிதவசனம் பயன்படாது என்றவாறு.
English Translation
You took this sweetly chirping girl to Tulavilli-Mangalam, filled with cool green bowers, then left her heartlessly. She now stands with tear-filled eyes and only mutters incoherently about grazing cows, measuring the Earth and reclining on waters.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்