- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(மனப்பரிப்போடு) அரக்கரசுரர் போல்வாரான விரோதிகள் பக்தவர்க்கங்களை நலியுமது பொறுக்கமாட்டாமே அழுக்கு மானிடசாதியில் வந்து பிறந்து அவர்களை அழியச்செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு இந்நிலத்தில் நிகராவார் யாருமில்லை யென்கிறார். கீழ்ப்பாசுரங்களிலும் மேற்பாசுரங்களிலும் சிலசில சேஷ்டிதங்களை விசேஷித்து எடுத்துரைத்து அநுபவிப்பதாக அருளிச்செய்யுமிவர் இப்பாட்டில் அங்ஙனம் ஒரு சரித்திரத்தை யெடுத்துரைக்கையன்றிக்கே ஸமுதாய ரூபேண அருளிச்செய்கிறார். இப்பாட்டில் “தான் தன சீற்றத்தினை முடிக்கும்“ என்பது உயிரான வாசகம். தண்ணளியே வடிவெடுத்த எம்பெருமாலுக்கும், சீற்றமுண்டோ வென்னில், சௌர்ய வீர்ய பராக்ரமங்களென்கிற குணங்களையும் உடையவனாக ப்ரஸித்திபெற்றிருக்கின்ற பகவானுக்கு எங்ஙனே சீற்றமில்லாமலிருக்கமுடியும்? சீற்றமுண்டானாலல்லது அக்குணங்கள் வீறுபெற வழியில்லையே. காருண்யமும் சீற்றமும் விஷயபேதத்தாலே வ்யவஸ்தைபெறும். பக்த விரோதிகள் திறத்திலே சீற்றமுண்டாகிலும் அவர்கள்மீது சிறிதும் சீற்றங்கொள்ளான், பக்தர்களிடத்திலே அபராதப்படுவார்மீது சீற்றமே வடிவெடுத்தவனாயிருப்பன்.
English Translation
Out of compassion he took birth in this filthy world of mortals. Taking the forms he chose to, he gave vent to his anger. My Lord and father wears a crown of Tulasi flowers. My Heart remembers him in wonder; who in the world can equal me?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்