- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
[கொடியவினை.] என்பெருமான் சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியாய் அவற்றை சரீரமாகக் கொண்டிரா நிற்கச்செய்தேயும் அவற்றிலுள்ள தோஷங்கள் தனக்குத் தட்டாதபடி யிருப்பவன். ஜீவாத்மாவானவன் இந்த சரீரத்தை அதிஷ்டிட்டு ஸ்வாதீநமாக நிர்வஹித்துக் கொண்டிரா நிற்கச் செய்தேயும் அதற்குரிய பால்யம் யெளவநம் முதலிய விகாரங்கள் உள்ளுறையும் தனக்குத் தட்டாதவாறுபோல இதனைக் கொள்க. “ஆவிசேருயினுள்ளால் ஆதுமோர் பற்றில்லாத பாவனையதனைக் கூடில் அவனையுங் கூடலாமே” என்றது காண்க. தத்வத்ரய வியாக்கியானத்தில் மணவாளமாமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி:- “சரீரியான ஜீவாத்மாவுக்கு சரீர ஸதன்களான ஸால்யாஷிகள் வந்ததில்லையேயாகிலும் சரீர ஸம்பந்த நிபந்தநமாக துக்க அஜ்ஞானிகள் வருகிறவோபாதி சரீரபூதமான இவற்றோட்டை ஸம்பந்தத்தாலே இவனுக்கு மிங்ஙனே சில தோஷங்கள் வாராதோவென்னில்; வாராது; அதுக்கடி ப்ரவேச ஹேதுவிசேஷம். இவனைப் போலே கர்மமடியாகவன்றிக்கே அநுக்ரஹமடியாகவிறே அவனுக்கு இவற்றில் ப்ரவேசமிருப்பது. *** என்னா நின்றதிறே” கொடியவினை யாவேனும் யானே = எம்பெருமானுக்குக் கர்மஸம்பந்தமில்லையாகிலும் கருமங்கள் யாவும் அவனிட்ட வழக்கேயாதலால் ‘கொடியவினை யாவேனும் யானே’ என்கிறது.
English Translation
My tender daughter wickedly prates, I have no wickedness of any kind then "I am the wickedness of deeds, I am the redeemer of wickedness, I am the doer of wicked deeds, I am the destroyer of wicked Lanka", Has the Garuda-riding Lord gotten her? O wicked people of the world, what can I say?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்