- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(கடியன் கொடியன்) தோழி! நான் சொல்லுகிறபடியே எம்பெருமான் குணசாலியாகவன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குணஹீநனானாலும் என்னெஞ்சம் அவனையல்லது அறியாது; இவ்விஷயத்தில் நின்றும் என்னை மீட்கைக்காகவன்றோ நீ அவனை குண ஹீந னென்பது; குணஹாநியையிட்டே நான் அவனை விரும்பி மேல்விழுகிறேனாகக் கொள்ளாய்; ஆகவே உன்னுடைய சொல்லுக்கு ஒரு ப்ரயோஜனமில்லைகாண் என்கிறாள். கடியன் = ஸ்வகார்யத்திலே எனவேக முடையவன் என்கை. தனக்கொரு காரியமுண்டானால் தானே வந்து மேல்விழுந்து சடக்கெனக் கலக்குமவன் என்றபடி. கொடியன் = இத்தலையில் நோபுபாராதே பிரியுமவன் என்கை. நெடியமால்- மிகவும் பெரியவன்; அதாவது- கைபுகுந்திருக்கச் செய்தேயும் அளவிட வொண்ணாதபடி யிருக்குமவன் என்கை. இதனுடைய கருத்தாவது- மேல்விழுந்து கலவா நிற்கச் செய்தே பிரியவேணுமென்று நினைப்பன்; அப்படி அவன் நினைத்ததையறிந்து, பிரியலாகாதென்று மடிபிடித்துக் கால்கட்டி விலக்கப்பார்க்கலாமே; அப்படி விலக்குவதற்குக் கூசிநடுங்கி அஞ்சியிருக்கவேண்டும்படி திடீரென்று பரத்வம் பாராட்டியிருப்பவனென்றவாறு. உலகங் கொண்டவடிவன் = பிறருடைமையைத் தனக்காக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் சேஷியாதபடிபண்ணி அவர்களைப் பாதாளத்தில் தள்ளுமவன்.
English Translation
O Sister! You have a slender waist, but a frail heart! May be the Lord is selfish, wicked and tar away. May be he is a world-grabber and hard to understand. Pity, my wicked heart still longs for him alone, what can Mother do?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்