- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(ஊர்நச்த சகடம்) எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறிகொடுத்த வெள்ளை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள். கண்ணபிரான் சகடாஸுரநிரஸனம் பண்ணினதும் பூதநாஸ்தந்யபானம் பண்ணி அவளை மாய்த்ததும் கம்ஸன் வரவிட்ட விரோதிவர்க்கங்களை மாய்த்தபடி என்று தோழி நினைத்திருந்தாள். இப்போது பராங்குசநாயகி சொல்லுகிறாள்- சகடாஸுரபஞ்ஜநாதிகள் என்னைத் தன் பக்கலிலே ஈடுபடுத்திக் கொள்ளுகைக்காகச் செய்தனவேயன்றி வேறில்லையென்கிறாள். பருவம் நிரம்பியபின்பு செய்திருந்தானாகில் இங்ஙனே சொன்னாலும் சொல்லலாம்; மிக்க இளம்பிராயத்திலே செய்த இவை இவளை யீடுபடுத்துகைக்கு உடலாவது எங்ஙனேயென்று நம்பிள்ளை சங்கித்துக்கொண்டு ஸமாதானமருளிச் செய்யுமழகு பாரீர் - “இவளுக்குத் தன் பக்கல் ப்ராவண்யத்தை விளைக்கை அவனுக்கு ஸந்தாப்யுக்தமென்கை” என்று நந்தகோப கிருஹகத்தில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே கண்ணனைத் தொட்டிலிலிட்டுக் கண் வளர்த்தி யசோதை யமுனை நீராடப்போனான்; கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்து ஸ்ரீகிருஷ்ண சிசுவின் மேலே விழுந்து கொல்ல முயன்றதை அறிந்த அப்பகவான், பாலுக்கு அழுகிறபாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கியுதைத்தருள, அவ்வுதை பட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்தது என்பது ஊர்ந்த சகடமுதைத்த வரலாறு.
English Translation
Sister! The red-lipped Lord who sucked the life out of Putana's breasts and smote the laden cart with his foot has possessed me. Night and day I prate of nothing save him. What can the world's gossip do to us?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்