- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(என்செய்யும்.) கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில். என்செய்யுமூரவர்கவ்வை தோழி! இனிநம்மை என்று தன் வடிவைக் காட்டுகிறாள்போலும். இனி என்கிறாயே, இதற்கு என்ன அர்த்தம்? என்ற கேட்க, மேல்மூன்றடிகளும் அவ்வர்த்தம் கூறுவன. தோழீ! நான் இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே என்னை நீ இதில் நின்றும் மீட்டிருக்கலாமாயிற்று; எல்லை நடந்து விட்டதே யென்கிறாள். “இனி என்னை” என்னாதே “இனி நம்மை” என்கிறது தோழியையும் தன்னோடு கூட்டிக்கொண்டு. நிறவேறுபாடு தனக்குப்போலவே அவளுக்குமுள்ளதென்று இத்தால் கட்டப்பட்டதாகும். “யாமுடைந்துணையென்னுந் தோழிமாரும் எம்மில்முன் அவனுக்கு மாய்வராலோ” என்றது இங்கே அநுஸந்தேயம். தோழியானவள் ‘மடலெடுக்க வேண்டா’ என்று வாயாலே நிஷேதிக்கிறாளேயல்லது மடலெடுக்க வேண்டும்படியான நிலமை அவளுக்கும் உள்ளதேயென்று காட்டுதற்கே நம்மை’ என்றது.
English Translation
Sister! My red-lotus-eyed Lord has possessed me. I have lost the red in my cheeks, my frame has waned, my red lips and dark eyes have lost their colour. Now what can the world's gossip do to us?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்