- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்தஹேது என்பதைக் கட்கூடாகக் காணாநிற்கச்செய்தேயும், பின்னையும் மேல்விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோகயாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார். நெருப்புக்கு ஆச்ரயாசம் என்று பெயர்; தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது நெருப்பின் இயல்பு; அதுபோலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் காணநிற்கச் செய்தேயும்-என்பது முதலடியின் கருத்து. செல்வம் விஞ்சி ஜீவிக்கப் பெறுமவர்களை அச்செல்வமே காரணமாகப் பொறாமையாளர்கள் சித்திரவதம் செய்வது உலகவியறகையாதரால் ஆழ்வார் இங்ஙனே யருளிச்செய்தது மிகப் பொருந்தும். நெருப்பாக என்றவிடத்தில் தொக்கியிருப்பதாகக் கொள்ளவேணும். கொள்ளென்று தமமுடும் = “பகல்கண்ட குழியிலே இராவிழுவாரைப் போலே” என்று ஒரு த்ருஷ்டாந்தம் அடிக்கடி ஆசாரியங்களி ஸாதிப்பதுண்டு; அதாவது, ஓரிடத்தில் ஒரு பெரிய பள்ளமிருக்கும்; அதனைப் பகலில் நன்றாகக் கண்டிருக்கச் செய்தேயும் இரவில் இருளிலே செல்லும்போது ஸ்பஷ்டமாகக் காணாநிற்கச் செய்தேயும் மீண்டும் அதனையே கொள்ளும்படியாக இப்படியும்; ஒரு தமோகுணம்வந்து மூடுமோவென்று ஆழ்வார் வியக்கிறார். தமஸ் என்னும் வடசொல் தமமெனத்திரிந்தது.
English Translation
Great wealth kindles raging fires of desire, then wraps the world in a cover of darkness all around. Benevolent gem-hued Lord, what ways are these? Wean me by your grace, and gift me your feet.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்