- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இதனால் அயோத்தியிலிருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் ராத்ரி வேளையில் ஏகாந்தமான இடத்தில் உல்லாஸமாக இருக்கையில், பிரணய ரோஷத்தினால் பிராட்டி பெருமாளை மல்லிகைமாலையைக் கொண்டு கட்டியதை அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்குமாதலால், இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகுமென்க. வநவாஸஞ்சென்றமை இன்னுங்கூறப்படாமையால், இச்செயல் நாட்டியிலிருந்தபோது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமேயன்றி, வநவாஸகாலத்து நிகழ்ந்ததாகக் கொள்ளுதல் பொருந்தாதென்க. முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலையுவமை- உடம்பின் இளைத்தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலு மென். ஸுகாநுபவத்துக்கு ஏகாந்தமானகாலமாதலால் எல்லியம்போது எனப்பட்டது. ஈற்றடியில், அங்கு- அசை.
English Translation
O Lady of full blossomed garland, Do with lotus-eyes! I fall at your feet and submit, pray hear me speak. Sweetly at dusk in a solitary place, you bound him with a string of Jasmine flowers. This here is another proof.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்