- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணம் தம்முடைய பேச்சுக்கு நிலமன்று என்பதை அழகுபட அருளிச்செய்கிறார். உரைக்கவல்லேனல்லேன்-உன்னுடைய பிரணயித்வ குணத்தை அநுபவித்தநுபவித்து உள்ள முருகுவே னத்தனையொழிய இன்னபடி யென்று பேசவல்லேனல்லேன் என்றபடி. முழுதும் பேச முடியாமற்போனாலும் பேசலாமளவு பேசினாலொவென்ன, உன் உலப்பில் கீர்த்திவெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான் என்கிறார்; உன்னுடைய ப்ரணயித்வ குணஸமுத்ரத்தின் கரையிலேதான்; என்னால் அடியிடமுடியுமோ? என்கை. கடலினுள்ளே இறங்கமுடியா முடியாதா என்கிற விசாரம் ஒருபுறமிருக்கட்டும்; கடற்கரைதன்னில் சென்று நிற்கவும் ப்ரஸக்தியில்லையே என்கிற இச்சொல்லழகு சாலவும் ரஸிக்கத்தக்கது. இங்ஙனே கரையருகும் சொல்லப்போகாத விஷயத்தில் நீர் ஏதோபேசிக்கொண்டிருக்கிறீரே, இஃது என்ன? என்று எம்பெருமான் கேட்டனனாகக்கொண்டு காதல் மையலேறினேன் என்கிறார். ப்ரேமத்தாலே கலங்கினேன்; கலங்கினவர்களின் செயலுக்கு ஓர் அடைவுமுண்டோ என்றவாறு. ஆழ்வீர்! உம்முடைய சொற்களை நோக்குமிடத்து, நீர் என்னுடைய குணக்கடலைக் கரைகண்டவராகத் தோற்றுகின்றீர்; இல்லையாகில் பெரிய பெரிய துதிமொழிகளைப் பேசப் புறப்பட்டிருக்கமாட்டீலே யென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினதாகக்கொண்டு, இரைத்து நல்ல மேன்மக்களேமத்த யானுமேத்தினேன் என்கிறார்.
English Translation
I am not fit to describe your infinite glory-flood. When will I reach its banks? Alas, I swoon with love. O Lord of faultless effulgence, you are indifferent to me. Great and good celestials stand and sing your praise; I too sang
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்