- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
அரசாட்சி புரிவதாகிய போகமும் எம்பெருமானருளாலன்றிக் கிடைக்கமாட்டாதென்றும், அங்ஙனமே கிடைக்கின்ற அதுதானும் நிலை நில்லாததென்றுமருளிச் செய்கிறார். அரசர்களின் மேன்மையை ஒன்றரைபடியால் விரிந்துரைக்கின்றார். அமைய வேண்டிய குணங்கள் யாவும் அமையப்பெற்றவர்களாயும், உலகமெல்லாம் கொண்டாடும்படியான புகழையுடையனராயும், பரம்பரையாகவே ப்ரபுக்களின் புத்திரர்களாயும், வேண்டினார் வேண்டினபடியே பொருள்களைக் கொடுப்பதாகிற ஔதார்யத்தைக் கடமையாகக் கொண்டவர்களையும், மேன்மைபாராட்டி இறுமாப்புடனிராதே சீலவான்களாய் உலகத்தோடு பொருந்துமாவர்களாயும் வாழ்வர்களெனினும் எம்பெருமானை ஆசரயிக்கப்பெறாதவர்கள் கீழ்ச்சொன்ன போகத்திலிருந்து சரிந்துபோவர்; ஆதலால், சேஷசாயியான எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள்; அப்படியாகில் மீட்சியின்றியே நித்யஸ்ரீயாக வாழலாம் என்றாராயிற்று. அவனையில்லார் என்பதற்கு “அவனையன்றிப் பெறார்” என்று நலிந்து பொருள் கொள்ளவுமாம். “அவன் ப்ரஸாதமில்லையாகில் அந்த ராஜ்யஸ்ரீதான் கிடையாது” என்று ஈடு முதலிய வியாக்கியானங்களில் ஸ்ரீஸூக்தி காண்பதால் இங்ஙனே பொருள் கொள்வது தகுதியென்று சில பெரியார் கருதுகின்றனர். “அவனையில்லார்-அவனை ஆச்ரயித்தலில்லாதவர்கள், மணங்கொண்ட போகத்துமன்னியும் மீள்வர்கள்” என்றுரைத்தல் பன்னீராயிரப்படியோடு பொருந்தும். திருநாம ஸங்கீர்ததனத்தில் ஊன்றுமவர்களை; திருவனந்தாழ்வானைப்போலே அத்தாணிச் சேவகத்தில் எம்பெருமான் அங்கீகரித்தருள்வன் என்ற கருத்துப்பட “பணங்கெளாரவணையான் திருநாமம்படிமின்” என்றார்.
English Translation
Even good benign kings of canopied fame, who make generous grants, may with goodwill and rule in fragrant happiness, but they too must one day fall, Learn the names of the serpent-couch Lord, for permanence
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்