- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வைதிகன் பிள்ளைகளைக் கொணர்ந்து கொடுத்த அதிமாநுஷ சேஷ்டிதத்தை அநுஸந்தித்து, இங்ஙனே அரியன செய்தும் அடியார்களைக் காத்தருளவல்ல பெருமானைப் பற்றின வெனக்கு யாதொரு துயருமில்லையென்கிறார். மீளாவுகைமாகிய பரமபதத்திற் சென்றவர்கள் மீண்டனரென்பது எங்ஙனே கூடுமென்றே சங்கைக்குப் பெரியோர்கள் இங்குப் பலவிதாமக ஸமாதானாங் கூறுவர்கள்: அச்சிராதிமார்க்கத்தாற் சென்றவர்கள் திரும்பி வருதவில்லையென்றும், அதுவும் அவர்களுடைய சுதந்திரமான இச்சையினால் இல்லையென்றும் இங்கு முக்கியமாக வுணர்க. “உடலோடுங் கொண்டு காடுத்தவனை” என்ற விடத்தை பட்டர் உபந்யஸித்தருளும்போது “பூசின மஞ்சளும் உடுத்தின பட்டும் இட்ட சவடிப்பூணூலும் இட்ட காதுப்பணிகளுமான வொப்பனையில் ஒன்றுங் குறையாதபடி கொண்டுவந்து கொடுத்தவ” னென்றருளிச் செய்தாராம். அது கேட்டவர்கள் “இப்பிள்ளைகள் பிறந்த க்ஷணத்திலேயே கொண்டுபோகப் பட்டார்களாகவன்றோ சொல்லுகிறது; அப்போது இவையெல்லாம் இருக்க ப்ரஸக்தியில்லையே” என்று பட்டரிடம் விஜ்ஞாபிக்க. “ரிஷிபுத்திரர்களாகையாலே பிறக்கிறபோதே அவற்றோடே பிறப்பர்காணும்” என்றருளிச் செய்தாராம். ரஸோக்தியிருந்தபடி.
English Translation
With ease on the same day in the same moment he drove the chariot with Arjuna and the Brahmin, beyond all this and entered his glorious world, and gave the Brahmin his son. So I end despair and praise him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்