- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் இனி ஒருநாளும் பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. பாண்டவர்களை அரக்கு மாளிகையில் அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும் வநவாஸாதிகளைப் பண்ணுவித்தும், இவ்வழிகளாலே தங்களுடைய ராஜ்யப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான துரியோதநாதியர் நூற்று வரும் முடியும்படி பஞ்சபாண்டவர்களுக்குப் பலவகை யுபகாரங்களைப் பண்ணின எம்பெருமானைக் குறித்து ஆழ்வார் அருளிச்செய்த வாசிக கைங்கரியரூபமான ஆயிரத்தினுள்ளும் பாகவத சேஷத்வ பர்யந்தமாகப் பேசின இத்திருவாய்மொழியை நெஞ்சிலே படியும்படி கற்க சக்தராசில் பாகவத சேஷத்வத்திற்கு இடையூறான பிறவி அடியறும் என்றாராயிற்று. ஈற்றடியில் ஆர என்பதற்கு ‘நெஞ்சிலே படியும்படி’ என்று பொருள் கொள்வதிற் காட்டிலும் ‘ஒரு பாட்டும் நழுவவிடாமே பூர்த்தியாக’ என்று பொருள் கொள்வது சிறக்கும். “அடியார் தம்மடியாரெம்மடிகளே” என்ற ஒன்பதாம் பாசுரமானவுடனே நிபுணர்களான அத்யாபர்களுங்குட “அடியார்ந்தவையமுண்டு” என்ற பத்தாவது பாசுரத்தை மறதியினால் விட்டிட்டு “அடியோங்கு நூற்றுவர்வீய” என்ற பதினோராம் பாசுரத்தை யனுஸந்திப்பதுண்டாதலால் ஸர்வஜ்ஜரான ஆழ்வார் ‘அப்படி ஒரு பாசுரத்தை யநுஸந்திப்பதுண்டாதலால் ஸர்வஜ்ஞரான ஆழ்வார் ‘அப்படி ஒரு பாகத்தை நழுவ்விடவேண்டா; ஆரக் கற்கவேணும்’ என்று உத்போதனம் செய்தருளுகின்றார்போலும்.
English Translation
This decad of the thousand songs on devotees of the Lord who aided the five against the hundred, by Kurugur city's Satakopan, -those who can sing it will end Karmic life.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்