- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
இறைவனை நினைப்பது மட்டும் அன்றி, அவனுக்கு வேண்டிய தொண்டுகளையும் செய்யவிரும்புகின்றார் ஆழ்வார். இன்னதொண்டு தான் செய்வது என்ற நியதியின்றி, இறைவனுக்குரிய எல்லாத் தொண்டுகளையும் செய்தல் வேண்டும்; அத்தொண்டுகளை ஒரு காலம் செய்து, பின் விடுவது என்றில்லாமல், எப்போதும் செய்தல் வேண்டும் என்று விரும்புகின்றார். ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்று தொடங்குகின்ற திருவாய்மொழி இக்கருத்தையே விரிவாகக் கூறுகின்றது. ‘அங்ஙனம் எல்லாத் தொண்டுகளையும் செய்யுமிடத்தும் அவற்றை என் விருப்பத்திற்காகச் செய்தல் ஆகாது; அவன் விருப்பத்திற்காகவே செய்தல் வேண்டும்; யான் செய்யும் தொண்டைக் கண்டு எம்பெருமான் மகிழ்ச்சியடைந்தால், அம்மகிழ்ச்சியைக் காண்பதே எனக்குப் பேரின்பமாகும்,’ என்று கூறுகின்றார்.
உரை:2
யானும் சிறப்புடைய மோக்ஷம் என்ன, சுவர்க்கம் என்ன, நரகம் என்ன இவற்றை இறக்கின்ற காலத்தில் பொருந்துக. பொருந்தாதொழிக; பிறப்பு இல்லாத பல பிறவிகளையுடைய பெருமானை மறதி என்பது சிறிதும் இல்லாமல் எப்பொழுதும் அனுபவிப்பேன்.
English Translation
Whether or not I find liberation, whether I go to heaven or to hell on dying, I will joyously remember my birthless. Lord who came in his many forms on Earth.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்