- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நித்ய கைங்கர்யத்திலே ஊன்றியிருக்குமடியேன் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தி லேசமுமில்லையென்று மீளவும் வற்புறுத்திப்பேசுகிறார். உய்ந்து போந்து என்றது ஸ்வரூபலாபம் பெற்றமை சொன்னபடி. இதற்குமுன், “அஸந்நேவ ஸ பவதி” என்னும்படி கிடந்த நான், இப்போது சேதநகோடியிற் புகுந்தேனென்றபடி. அஸந்தான நிலைமை தவிர்ந்து ஸத்தான நிலைமை யடைந்தவாறே, பாபங்கறெல்லாம் தொலையப் பெறுகையாலே என் உலப்பில்லாத வெந்தீவினைகளை நாசஞ்செய்து என்கிறார். உலப்பு-முடிவு; எத்தனை காலமனுபவித்தாலும் முடிவு பெறமாட்டாத கொடுவினைகளெல்லாம் தொலையப்பெற்று,’என்றவாறு. உனது அந்தமில் அடிமை யடைந்தேன் விடுவேனோ?-ஆத்மா வுற்றவரையில் கைங்காரியம் செய்வது தவிர வேறுவிதமர்ன போதுபோக்கைக் கொள்வதில்லை யென்று, திண்ணிய வுறுதி கொண்ட நான், எவ்விதத்திலும் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தியில்லை யென்றபடி. அந்தம் இல் அடிமை-ஆத்மஸ்வரூபத்திற்கு அந்தம் இல்லாமையாலே, ஸ்வரூபாநுபந்தியான கைங்காரியத்திற்கும் அந்தமில்லை யென்க.
English Translation
My Lord reclining on the hooded snake in the Mil Ocean, engaging in Yogic thought! Constantly I thought of you; destroying my ageless karmas, I have saved myself, Now that I am in your service, will I ever let you go?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்