- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள். (உள்ளுலாவி உலர்நதுலர்ந்து) பகவத் கீதையிலே ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிச் சொல்லும்போது * அச்சேத்யோய மதாஹ்யோயம் அக்லேத்ய; அசோ‘ய் ஏவ ச. * என்று சொல்லப்பட்டுளளது. அசோஷ்ய; - உலர்த்த முடியாதது - என்று சொன்னதும் பழுதாயிற்று; ஆந்தரமான மநஸ்ஸூக்கு தாரகமான ஆத்மா சருகாயிற்று. அந்த நிலைமையிலும் விடாயர் கற்பூரநிகரம் வாயிலிடுமா போலே என வள்ளலே! கண்ணனே! என்கிறாள்-- அவனுடைய ஔதார்யத்தையும் ஸௌலப்யத்தையுஞ் சொல்லிக் கத்துகிறாளென்க. பின்னும் வெள்ளநீர்க் கிடந்தாய் என்னும்=ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் *அந்தகாரே அதி தீவ்ரே ச நரஸிம்ஹமநுஸ்மரேத், தரத்யகிலதுஃக்கா நி தாபார்த்தோ ஜலசாயிநம் *என்றுசொல்லப்பட்டுள்ளது. திணுங்கின; இருளிலே நரஸிம்ஹமூர்த்தியை நினைக்கவேணுமென்றும், தாபம் மிக்கிருக்குங்காலத்து க்ஷரிரார்ணவசாயியான எம்பெருமானை நினைக்கவேணுமென்றும் சொல்லியிருக்கையாலே வெள்ள நீர்க்கிடந்த பெருமாளைப் பேசாநின்றாள்.
English Translation
Her heart is dry, her soul is parched, "Dear-as-my eyes Lord!" Oh, the deceit that my clever one has fallen prey to!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்