விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உன்னிய யோகத்து உறக்கத்தை,*  ஊரகத்துள்-
    அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை,*

    என்னை மனம்கவர்ந்த ஈசனை,* -வானவர்தம்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊரகத்துள் அன்னவனை - திருவூரகத்தில் விலக்ஷணனாய்
அட்ட புயகரத்து எம்மான் எற்றை - அட்டபுயகரதலத்திலுள்ள அஸ்மத் ஸ்வாமி சிகா மணியாய்
என்னை மனம் கவர்ந்த ஈசனை - எனது நெஞ்சைக் கொள்ளைகொண்ட தலைவனாய்
வானவர் தம் முன்னவனை - தேவாதிராஜனாய்
மூழிக்களந்து விளக்கினை - திருமூழிக்களத்தில் விளங்குபவனாய்

விளக்க உரை

ஊரகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் ஸந்நிதி. இத்தலத்தில் திருமாள் உரகருபியாய் ஸேவை சாதிப்பதுபற்றி இத்திருப்பதிக்கு ஊரகம் என்று திருநாமமென்பர், உரகம் – பாம்பு வடசொல். அட்டபுயகரம் –இத்தலத் தெம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகள் உள்ளது பற்றி அஷ்டபுஜன் என்று திருநாமமாய் அவன் எழுந்தருளியிருக்கின்ற கரம் – க்ருஹம் ஆதல்பற்றி அட்டபயக்ரமென வழங்கப்படும் அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாருமுளர். என்னை மனங்கவர்ந்த வீசனை வானவர்தம் முன்னவனை – வானவர்தம் முன்னவனென்று தேவாதிராஜனான பேரருளானப் பெருமாளைச் சொல்லுகிறதென்றும், “என்னை மணங்கவர்ந்த வீசனை“ என்கிற விசேஷணம் இவ்வர்த்தத்தை ஸ்திரப்படுத்துகின்றதென்றும் பெரியோர் கூறுவர். திருமங்கையாழ்வாருடைய மனத்தைக் பேரருளாளன் கவர்ந்தானென்னுமிடம் இவரது. பைவத்திலே காணத்தக்கது. கனவிலே காட்சிதந்து வேகவதியில் நிதியைக் காட்டித் துயர் தீர்த்த வரலாறு.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்