விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,*
    தொல்நீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,*
    என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,*
    மன்னும் கடல்மல்லை மாயவனை,*  -வானவர்தம்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பின்னை மணாளனை - நப்பின்னை நாயகனாய்
பேரில் பிறப்பு இலியை - திருப்பேர் நகரிலெழுந்தருளியிருக்கிற நித்யஹித்தனாய்
தொல் நீர் கடல் கிடந்த - என்று மழியாத நீரையுடைய கடலிலே பள்ளிகொள்பவனாய்
தோளா மணி சுடரை - துளைவிடாத ரத்னம்போலே ஜ்வலிப்பவனாய்
என் மனத்து மாலை - என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்

விளக்க உரை

வல்லவாழ் – மலைகாட்டுத் திருப்பதிகள் பதின்முன்றனுள் ஒன்று, நம்மாழ்வாராலும் மங்களாசாஸனஞ் செய்யப்பெற்ற தலம். இதனைத் திருவல்லாய் என்று மலையாளர் வழங்குகின்றனர். வல்லவாழ்ப் பின்னை மணாளனை – நப்பின்னைப் பிராட்டியை மணம்புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவைஸாதித்தன்ன் போலும். பேர் –திருப்பேர்நகர், அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரில் பிறப்பிலியே – அடியவர்களுக்காகப் பலபல பிறவிகள் பிறந்திருந்தும் இதுவரை ஒரு பிறப்பும் பிறவாதவன்போலும் இனிமேல்தான் பிறந்து காரியஞ் செய்யப் பாரிப்பவன்போலும் ஸேவைஸாதிக்கிறபடி. தோளாமணிச்சுடரை – தோளுதலாவது துளைத்தல், துளைத்தல் செய்யாத மணி யென்றது – அநுபவித்து பழகிப் போகாமல் புதிதான ரத்னம் என்றபடி. (துளைவிட்டிருந்தால் நூல்கோத்து அணிந்து கொள்ளுவர்கள்) “அநாலித்தம் ரத்நம்“ என்று வடநூலாரும் சொல்லுவர்கள்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்