- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இப்படி அந்யபரையாய்க் கிடந்த என்னைச் சில பெண்டுகள் அழைத்துக் கொண்டுபோய்ப் படாதபாடு படுத்தினார்களென்கிறாள் மேல். தன்னிலத்தில் செழுமை மாறாது விளங்குகின்ற தாமரை போன்ற திருக்கண்களாலே எல்லாரையும் மதிமயக்கவல்லனாய், மால் என்றே திருநாம்முடையனான ஒரு விலக்ஷண மஹாபுருஷன் எல்லாரும் மனமகிழும்படிகுடக் கூத்தாடிக் கொண்டு “பெண்களே! எனது கோலத்தைக் கண்டீர்களா? இனி உங்களுடைய நாண்மடமச்சம் முதலிய குணங்களைக் காத்துக்கொள்ள முடியுமானால் நன்கு காத்துக்கொள்ளுங்கள்“ என்று சொல்லுவான் போன்ற்று வீதியார வருகின்றமையைக் கண்ட என் தாய்மார்களும் மற்றுமுள்ள பெண்களும் கடுக என்பால் ஓடிவந்து. ‘அடீ! ஈதென்ன விளையாட்டு!, எழுத்து ஓடிவா‘ என்றழைக்க, எனக்குப் போராத காலம் வலி தாயிருந்தபடியால் அவர்களது வார்த்தையை அலக்ஷியம் செய்திருக்க மாட்டாமல் பதறியெழுந்து ஓடிச்சென்றேன். அங்குச்சென்று சேர்ந்த க்ஷணத்தில்தானே நான் நிறமிழந்தேன், கையில் வளைகள் கழன்று விழுந்து போம்படி உடல் ஒரு துரும்பாக இளைக்கப் பெற்றேன், “இப்படிப்பட்ட காம நோய் உனக்கு உரியதன்று“ என்று நன்மை சொல்ல வந்தவர்களுடைய பேச்சையும் ஒரு பொருளாக மதியாமல் உதறித்தள்ளி விடும்படியான நிலைமையில் நின்றேன்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்