- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நான் ஒருநாள் உனக்குத் திருமஞ்சனஞ்செய்து அமுதூட்டி உன்னைத்தொட்டிலில் தூங்கவிட்டு யமுனையில் தீர்த்தமாடப்போக, அப்போது, முலைப்பாலுக்காகக் குழந்தைகள் அழுவதைப்போலே காலைத்தூக்கி புதைத்து வலிய சகடத்தை முறித்துத் தள்ளினாய்; அன்றியும், மற்றொருகால் அவ்விளம்பிராயத்திலேயே ஒரு கன்னிகையை ஸம்போக சின்னங்களால் உருவம் மாரும்படியும் செய்திட்டாய்; இப்படி மனிதரால் செய்யலாகாத செயல்களைச் செய்வதனால் ‘இவன் நம்மோடு சேர்ந்தவனல்லன்; நம்மிலும் வேறுபட்ட கடவுள்’ என்று உன்னைத் தெரிந்து கொண்டேன்; ஆன பின்பு உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள். நன்றாக நீராட்டினேன் என்றபொருளில் பொன்போல் நீராட்டினேனென்பது ஒருவகை மரபு. “ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த வெழுதிங்களில், ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப்போனேன், சேடன் திருமறுமார்வன் கிடந்து திருவடியால் மலைபோல், ஓடுஞ்சகடத்தைச் சாடியபின்னை உரப்புவதஞ்சுவனே” என்ற பெரியதிருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டை ஒருபுடை ஒப்பிடுக. போனேன் -வினையாலணையும் பெயர்; வினைமுற்றுஅன்று. அன்பா=எதைக் கண்டாலும் அதன் மேல்விழும்படியான விருப்பமுடையவனே! என்கை. வேற்றுவஞ் செய்துவைக்கையாவது “கண்மலர் சோர்ந்து முலைவந்துவிம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப, என் மகள் வண்ணமிருக்கின்றவா நங்காய்! என்செய்கேன் என்செய்கேனோ”” என்ற பாசுரத்திற் பகர்ந்தபடி பண்ணுகை.
English Translation
I bathed and fed you, left you here and went. Before I returned you smote and overturned a loaded cart then went into the Northern room and disfigured a thin-waisted dame. O dear! I know you now, I fear to give you suck.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்