- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கண்ணபிரான் தரையிலே காலூன்றி நடக்க மாட்டாத இளங்குழந்தையாய் இருக்கச்செய்தேயே அநாயாஸமாக விரோதி நிரஸ்நம் பண்ணினவனாயிருந்துவைத்து, பருவம் முற்றமுற்ற ஆச்ரிதைகளான எங்களுக்குத் தீமை செய்ய தலைப்படுவதே என்று வயிறெரிந்து முறைப்படுத்தப்படுகின்றனர். உள்ளத்தின் உள்ளே-இவள் நம்மை நலிய வருகின்றாள் என்று-தான் தெரிந்து கொண்டதை வெளிப்படுத்தினாள், வந்த பூதனை அஞ்சி ஓடிப் போய் விடுவாளென்று உள்ளத்தின் உள்ளே அவளை உறநோக்கினான். ’சுவைத்தான்’ என்ற சொல்நயத்தினால்-விஷந்தடவின அம்முலையைத் தானுண்ணும்போது மாம்பழக்கதுப்பு செப்புமா போலே ரஸ்யமாக உறிஞ்சியுண்டான் என்பது போதரும்; விஷமுண்டால் சிறிது வருத்தமாயினும் உண்டாகக்கூடுமன்றோவென்று சங்கித்து, அக்கண்ணபிரானுக்கு அது லேசமுமில்லை யென்பதைக் காட்டும் “துவக்கறவுண்டானால்“ என்பது.
English Translation
He was a toddler barely able to walk a step. Deep from his heart he took a good look at her. She was an ogress disguised as a midwife. He sucked her breast and drew her life out. Today we are finished,--unharmed by the poison he drank,--O, We are finished.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்