விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உணர்வார் ஆர் உன்பெருமை?* ஊழி தோறுஊழி,*
    உணர்வார் ஆர் உன்உருவம் தன்னை?,*  உணர்வார்ஆர்-
    விண்ணகத்தாய்!*  மண்ணகத்தாய்!*  வேங்கடத்தாய்!*  நால்வேதப்-
    பண்ணகத்தாய்!*  நீகிடந்த பால்?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண்ணகத்தாய் - பரமபதத்திலெழுந்தருளியிருப்பவனே!
மண்ணகத்தாய் - இந்த மண்ணுலகில் திருவ்வதரிப்பவனே!
வேங்கடத்தாய் - திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய் - ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப்படுபவனே!
உன் பெருமை - (இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை

விளக்க உரை

திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லைநிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படியிருந்தாலும் அவன் தன்மை அறிவார்தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார். இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால் ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும் “ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.

English Translation

Who realises your glory? O Lord in the sky! O Lord on Earth! O Lord of Venkatam! O Lord of the four vedic chants! Who realises your forms? Who realises where you recline, age after every age?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்