விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெளிதுஆக*  உள்ளத்தைச் செந்நிறீஇ,*  ஞானத்து- 
    எளிதுஆக*  நன்குஉணர்வார் சிந்தை,* - எளிதுஆகத்-
    தாய்நாடு கன்றேபோல்*  தண்துழாயான் அடிக்கே,* 
    போய்நாடிக் கொள்ளும் புரிந்து.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஞானம் - பகவத்விஷய பக்தியாலே
தெளிது ஆக - ‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு - நன்றாக
உணர்வார் - அறிபவர்களுடைய
சிந்தை - மனமானது.

விளக்க உரை

ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘உம்முடைய நெஞ்சுபோலே எங்களுடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்க; அவர்கட்கு உத்தரமாக அருளிச்செய்வது போலும் இப்பாட்டு. பட்டிமேயவொண்ணாதபடி மனத்தையடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை அறிந்திருப்பவர்களின் மனமானது மற்றெவரையும் பற்றாமலும் ஐம்புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே பதறிக்கொண்டு மிக்க ஆவலுடன் சென்று கிட்டும்; ஒரு கன்றுக்குட்டியானது பல்லாயிரம் பசுக்களின் திரளினுள்ளே தனது தாயைக் கண்டுபிடித்துக்கொள்வது எப்படியோ அப்படியே இதுவும் . இதற்கு ஸம்பந்தவுணர்ச்சியே காரணம். ஸம்பந்தஜ்ஞான மில்லாதவர்களுக்கு ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸுலபம் என்றாராயிற்று.

English Translation

Clearing their hearts of dross, clear-thinking seers of steadfast devotion, easily attain the feet of the Tulasi-garland Lord, like the calf finding the mother-cow through love.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்