விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்*   ஒருநாலும் ஒன்றும் உடனே,* 
    செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க*   மழுவாளில் வென்ற திறலோன்,*
    பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்*   புலமங்கை கேள்வர் புகழ்சேர்,* 
    பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி*  யவர் நம்மை ஆள்வர் பெரிதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செரு நுதலூடு போகி – பூசற்களத்தின் முகப்பிலே சென்று
அவர் ஆவி மங்க – அவ்வரசர்களின் உயிர்முடியும்படியாக
மழுவாளில் – கோடாலிப்படையினால்
வென்ற – கொன்றொழித்த
திறலோன் – மிடுக்கையுடையராய்

விளக்க உரை

பரசுராமாவதாரத்தைப் பேசும் பரசுரம் இது. முமுக்ஷுக்களுக்குப் பரசுராமாவதாரம் உபாஸநைக்கு உரியதன்றாகிலும் விரோதிகளைக் களைந்தொழித்த உபகாரத்துக்குத் தோற்றுத் துதிப்பதில் குறையில்லை யென்க. ஆழ்வார்கள் இப்பரசுராமாவதாரத்தைப் பற்றிப் பேசுவதும், இராமாநுசநூற்றந்தாதியில் “கோக்குல மன்னரை மூவெழுகால் ஒரு கூர்மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன்….. இராமாநுசன்” என்று அமுதனார்அருளிச்செய்வதும் விரோதி நிரஸநஸ்வபாவத்துக்குத் தோற்றுத் துதிப்பது மாத்திரமே யென்க.

English Translation

The wicked Ravana came to the forest hut when the beautiful sharp-eyed Sita was alone, and abducted her. Our Lord Tirumai Singled out the wonder-deer from the herd and killed it. He then rained fire-spitting arrows over the Rakshasa;s Lanka haunt and routed the city. That Avatara is our protect for and king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்