விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க*   எரிகான்றுஇரண்டு தறுகண்,* 
    அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று*   பரியோன் சினங்கள் அவிழ,*
    வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்*   மதியாது சென்று ஓர்உகிரால்* 
    பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு*   பெருநீரில் மும்மை பெரிதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தயங்க – அசைந்து விளங்க
எரிகான்ற – அழலை உமிழா நின்றுள்ள
இரண்டு தறுகண் – வட்டணித்த இரண்டு திருக்கண்களும்
அளவு எழ – அளவு கடந்து மலர(ப்பெற்ற)
வெம்மைமிக்க அரி ஆகி – பயங்கரமான நரஸிம்ஹரூபியாய்

விளக்க உரை

நரஸிம்ஹாவதாரத்தை அநுபவித்துப் பேசுகிறார். ஆச்ரித விரோதியான ஹிரண்யகசிபுவுக்குக் குடல் குழம்பும்படி பயங்கரமான வடிவத்தை ஏற்றுக்கொண்டு வரச் செய்தேயும் பக்தசிகாமணியான ப்ரஹலாதாழ்வானுக்குக் கண்குளிர ஸேவைஸாதிக்க விரும்பிப் பரமபோக்யமான பூமாலையை அணிந்துகொண்டு வந்து தோன்றினன் நரஸிம்ஹ பகவான் என்கிறார் தளையவிழ் கோதைமாலை இருபால் தயங்க; என்றதனால். ‘தலையவிழ்’ என்றது விகஸித்தலைச் சொன்னபடி. “கட்டு நெதிழா நின்றுள்ள தொடைகொள்மாலை பூமாலை யென்னுமிவை இரண்டருகும் அசைந்துவர” என்பது வியாக்கியான வருளிச்செயல். எரிகான்ற+இரண்டு, எரிகான்றிரண்டு; தொகுத்தல். உண்டான சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியனளவில் மாத்திரமேயன்றி ‘உலகங்கட்கெல்லாம் இப்போதே உபஸம் ஹாரம் விளைந்திடுமோ!’ என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி அளவுமீறி யிருந்ததனால் ‘அளவெழ வெம்மைமிக்க அரியாகி’ என்றது. ‘பாரியோன் சினம் அவிழ’ என்னாதே ‘சினங்கள்’ என்று பன்மையாகச் சொன்னது இரணியனுக்கு பகவத் பாகவத விஷயங்களில் பலவகைப்பட்ட சீற்றம் இருந்தமையைக் காட்ட. ‘விளையுகிராளி’ என்றது நரஸிம்ஹமூர்த்திக்கும் விசேஷணமாகலாம் இரணியனுக்கும் விசேஷணமாகலாம். வுளைந்த நகங்களை யுடைத்தாயிருக்கை அசுரனுக்கும் சிங்கத்துக்கும் ஒக்கும். இரணியனுடைய மார்பை இருபிளவாகக் கிழித்தபோது உண்டான ரக்தப்பெருக்கு மஹாப்ரள யவெள்ளத்திற்காட்டிலும் மும்மடங்கு பெரியதாயிருந்தது என்றதாயிற்று.

English Translation

In the yore, the Lord came as a strong man-lion His garlands of flowers and gems swung wildly on either side, his glowing red round eyes came bulging out. The haughty king Hiranya;s reign of terror ended. The haughty king Hiranya;s reign of terror ended. With sharp curved claws, he tore into the chest of the mighty Asura. The blood that spewed then was three times bigger than the flood the deluge waters! Once the Lord came as a manikin, full all ripe knowlede and Vedic chants and asked for a gift of three strides of land. Receiving if, he grew, and raised his foot over the seven worlds, up into the sky. The moon stood in praise, the lotus-bord Brahma bowed in obeisance. That Avatara is our protector and king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்