விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மால் இனம்துழாய்*  வரும் என் நெஞ்சகம்,* 
    மாலின் அம்துழாய்*  வந்து என்உள்புக,*
    கோல வாடையும்*  கொண்டு வந்ததுஓர்* 
    ஆலி வந்ததால்*  அரிது காவலே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாடையும் - வாடைக்காற்றையும்
கொண்டு வந்தது - துணைகூட்டிக்கொண்டு வந்துவிட்டது.
ஆல் - அந்தோ! (இனி)
காவல் - (உயிரைக்) காப்பாற்றிக் கொள்
அரிது - முடியாதகாரியம்

விளக்க உரை

‘எநெஞசகம் மால் இனம் துழாய்வரும்’ என்று முதலடியைப் பிரித்து அந்வயிப்பது. என்னுடைய நெஞ்சானது தான் கொண்டிருக்கிற வியாமோஹத்திற்குத் தகுதியாகக் கவலைகொண்டிருக்கின்றது என்றபடி. துழாய் - துழாவி “கடலும் மயலயம் விசும்புந்துழாய்” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங்காண்க. இனி இரண்டாமடியை, ‘மாலின் அம் துழாய்வந்து என் உள்புக’ என்று பிரிந்து அந்வயிப்பது. அந்த எம்பெருமானுடைய அழகிய திருத்துழாயானது எனது உள்ளத்தில்புக (அதாவது) அத்திருத் துழாயை நான் நெஞ்சால் நினைத்தமாத்திரத்திலே என்றபடி. (வந்ததோர்ஆலி கோல வாடையுங் கொண்டு வந்ததால்) ஆலியாவது சிறுதுளி. (மழைத்துளி). இதுவிரஹிகளுக்கு உத்தீபக மெனப்படும். இது ஏற்கெனவே வந்து என்னை நலிவதற்கு நிலம்பார்த்துப் போயிற்று; தகுந்த துணைகூட்டிக்கொண்டு வந்து நலியவேணுமென்று பண்டேபார்த்துப் போயிற்று; அது இப்போது வாடைக்காற்றைத் துணைகொண்டு வந்திட்டது இனி என்னைக் காத்துக்கொள்ளுதல் எளிதன்று என்கிறாள்.

English Translation

My heart was searching for the Lord everywhere, when his cool Tulas garland came along with a fragrarii breeze and entered me. A wee bit of if stuck in my like a thorn, Alas, it is impossible to save myself now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்