- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!* ஆயர் மடமக்களை,*
பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்* பின்னே சென்றுஒளித்திருந்து,*
அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு* அரவுஏர்இடையார் இரப்ப,*
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற* மரம் ஏறி இருந்தாய் போலும்
காணொளி
பதவுரை
தீமைகள் செய்வர்களோ - தீம்புகள் செய்யத் தகுமோ?
பங்கயம் நீர் - தாமரைப்பொய்கையிலே
குடைந்து - அவகாஹித்து
ஆடுகின்றார்கள் பின்னே சென்று - நீராடப்போனவர்களின் பின்னேபோய்
ஒளித்து இருந்து - மறைந்து கொண்டிருந்து
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் கண்ணபிரானைப் பொடிவதற்குச் சிறிது தொடங்கின யசோதை இது முதலாக மூன்று பாசுரங்களிலே தான் கேள்விப்பட்டிருந்த சில சேஷ்டிதங்களை யெடுத்துரைத்து இப்படியும் தீமை செய்யலாமோ வென்கிறாள்.
English Translation
O Lord! How could you do such things to innoent cowherd girls? You followed them to the lotus tank, hid and made off with their clothes while they bathed, climbed up a tree and said, "Girls, come up and take your clothes!" -while the thin waisted girls stood in the water pleading
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்