விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருவில் பொலிந்த எழில்ஆர்*  ஆயர்தம் பிள்ளைகளோடு* 
    தெருவில் திளைக்கின்ற நம்பீ*  செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*
    உருகிஎன் கொங்கையின் தீம்பால்*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,* 
    மருவிக் குடங்கால் இருந்து*  வாய்முலை உண்ண நீ வாராய்    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயர்தம் பிள்ளைகளோடு - இடைப்பிள்ளைகளோடு கூட
தெருவில் திளைக்கின்ற - வீதியிலே விளையாடுகின்ற
நம்பீ - பிரானே!
செய்கின்ற - நீ செய்துவருகிற
தீமைகள் - தீம்புகளை

விளக்க உரை

திருவிற்பொலிந்த எழிலார் - தன்னுடைய அழகுக்கு ஏறக்குறையத் தகுதியான அழகுடைய பிள்ளைகள் என்றபடி. (தீமைகள் கண்டிட்டு உருகி) ஏற்கனவே ப்ரேமத்தாலே பெருகுகின்றபால், அதற்குமேலே நீ தீமை செய்யும்படிகளைக் கண்டு உள்ளுருகி வெள்ளமிடுகின்ற தென்றபடி. தீம் பால் -மதுரமானபால். ‘தீம்’ என்று இனிமை. (ஓட்டந்து) ஓட்டம் தந்து என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து விகாரப்பட்டு ‘ஓட்டந்து’ என்றாயிற்று, உடன்பாட்டு இறந்தகால வினை யெச்சம், ஓட்டம் தருதலாவது ஓடிவருதல், ப்ரவஹித்தலைச் சொன்னபடி.

English Translation

O Lord playing in the streets with beautiful cowherd boys! Seeing your naughty pranks. my breasts well with sweet milk, Overflowing come, sit on my lap and take suck with your auspicious lips

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்