விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன்னை நைவிக்கிலேன்*  வல்வினையேன் தொழுதும்எழு,*
    பொன்னை நைவிக்கும்*  அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
    என்னை நைவித்து*  எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,* 
    புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து*  அழகுஆய புல்லாணியே.  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புன்னை பொழில் சூழ்ந்து - புன்னைமரச் சோலைகளாலே சூழப்பட்டு
அழகாய - அழகியதாயுமிருக்கிற
புல்லாணி - திருப்புல்லாணியை
தொழுதும் - வணங்குவோம்,
எழு - புறப்படு.

விளக்க உரை

“தன்னைநைவிக்கிலேன்” என்கிறபாடமே இதுவரை நாம் அறிந்திருந்தது; ஒரு பெரியார்“தன்னை நைவிக்கில் என்” என்கிற பாடத்தைத் தெஜீவித்தருளக் கேட்டபின் அதுவே மிகவும் பொருத்தமான பாடமொன்று தோன்றிற்று. மேலே “உருகி நெஞ்சே நினைந்திங்கிருந்தென்?” “எள்கி நெஞ்சே நினைந்திங்கிருந்தேன்?” என்கிற பாசுரங்களின் நடைக்கு இது மிகவும் சேருமன்றோ. நாம் வெறுமனே நைந்து கொண்டிருப்பதனால் என்ன பயன் என்றபடி. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற்கு மிணங்கியதே இப்பாடம். திருப்புல்லாணிக்கு இரண்டு விசேஷணங்களுள்ளன; இரண்டாமடியும் மூன்றாமடியுஞ் சேர்ந்து முதல் விசேஷணம். நம்மோடு கலந்து பிரிந்துபோன பெருமான் உறையுமிடம் என்கை. செருந்தி என்று ஸுரபுன்னைக்குப் பெயர். அதன் மலர்களும் தாதுகளும் பொன்னிறமாயிருக்குமாதலால் “பொன்னைநைவிக்கு மப்பூஞ்செருந்தி” எனப்பட்டது. பொன்னை நைவித்தலாவது-நிறத்தினால் தோற்பித்தலாம். “மணி நீழல்வாய்” என்று மிகுதியாக வழங்கிவரும் பாடம் மறுக்கத்தக்கது. “நிறமும் மணமும் நிழலும் இவை யெல்லாமுண்டாயிக்கிறபடி. ஓரிந்த்ரியங்கொண்டு ஒதுங்க நிழலில்லை திடீர் ஸர்வேந்த்ரியா பஹார;மமான் தேசம். ச;ரிந்த்ரியத்துக்கு நிறம்; க்ராணேந்த்ரியத்துக்கு மணம்; ஸ்பர்சேந்த்ரியத்துக்கு நிழல்” என்ற வியாக்கியான வாக்கியங்கள் காண்க. அழகிய நிறமும் மணமுமுடைத்தான புன்னைப் பொழிலின் நிழலிலே ஸம்ச்லேஷித்து என் மேனி நிறத்தைக் கொள்ளைகொண்டு என்னை வெறுந்தரையாக்கிவிட்டு அகன்றுபோன பெருமாணுறையுமிடமான திருப்புல்லாணியைத் தொழுவோம் நெஞ்சே! புறப்படு என்றாளாயிற்று. அவன் வஞ்ச கள்வன் மாமயனாகையாலே தன் காரியத்தைச் செய்தான்; நாம் சேஷபூதராகையாலே நம் காரியத்தைச் செய்வோமென்றவாறு.

English Translation

O Heart! Bow that-a-ways and arise. O sinful me! I cannot destroy myself. The Lord blended with me in the cool shade of that fragrant Serundi free whose flowers excel the hue of gold, stole my rouge and deserted me. He resides in beautiful Pullani surrounded by Punnai groves that spill pearly buds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்