- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நாட்டினாய் என்னை* உனக்குமுன் தொண்டுஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை-
காட்டினாய்* கண்ணபுரத்து உறை அம்மானே!
காணொளி
பதவுரை
அத்தனையே கொண்டு - அவ்வளவே காரணமாக
என் வல் வினையை - எனது கொடிய பாவங்களை
மாட்டினேன் - மாளச்செய்தேன்; (அதுவுமன்றி)
பாட்டினால் - இப்படிப்பட்ட பாசுரங்களினால்
உன்னை என் நெஞ்சத்து இருந்தமை - நீ எனது நெஞ்சினுள் இருக்கிற படியை
விளக்க உரை
இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான முடிவில் “இவரைப் பாடுவித்த முக்கோட்டை யிருந்தபடி” என்றொரு வாக்யமுள்ளது. அதன் கருத்தாவது – மலையாளத்தில் ‘முக்கோட்டை’ என்று ஒரு இடமாம்; அவ்விடத்தில் ஊமைகள் சென்றாலும் அந்நில மிதியால் வெகு அழகாகக் கவி பாடுவர்களாம். (இதுமுற்கால வழக்கம் போலும்.) திருக்கண்ணபுரத்தை அந்த முக்கோட்டையாக ஆழ்வார் திருவுள்ளம்பற்றினபடி.
English Translation
O Lord of kannapuram! First you made me your servant. By that alone I was rid of all my karmas. Then through songs you revealed your presence in my heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்