- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தன்னை மறக்கமுடியாதபடி எம்பெருமான் உமக்குப் பண்ணித்தந்த உபகாரந்தான் ஏதென்ன, தன்னுடைய அநுபவத்துக்கு இடையூறு வராதபடி பண்ணித்தந்த மஹோபகாரகனன்றோ வென்கிறார். “பிறவாமைப் பெற்றேனே” என்பதற்குப் பலபடி பொருளருளிச் செய்வர்; பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானங் காண்மின் – “இப்பேற்றுக்கு விச்சேதத்தைப் பண்ணக்கடவ ஜன்மம் மறுவலிடாதபடி பெற்றேனென்னுதல்; அன்றிக்கே இப்பேற்றுக்கடியாக என்பக்கல் ஒரு நன்மை பிறவாதிருக்கச் செய்தே பெற்றேனென்னுதல்; அங்ஙனுமன்றிக்கே, பெற்றேனென்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாதபடி பெற்றேனென்னுதல். உபகாரஸ்ம்ருதி அநுவர்த்தித்தவன்று ப்ரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல்பட வேண்டும்படி யிருக்குமிறே; அது வேண்டாதே ‘ப்ராப்தம் இது’ என்றிருக்கும்படி உபகரித்தானாயிற்று.” என்று. இனிப் பிறப்பில்லாமையைப் பெற்றேன் என்பது முதல் அர்த்தம்; (என்னிடத்தில் ஒரு ஹேதுவும்) பிறவாமல் பேறுபெற்றேன் என்பது இரண்டாவது அர்த்தம்; நன்றியறிவும் பிறவாமலே பேறுபெற்றேன் என்பது மூன்றாவது அர்த்தம்.
English Translation
I took birth in a vast ocean of nescience, with no love for the learned ones. Then when I was born again, the Lord of fertile Vayalali gave me his grace, and freed me from rebirth.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்